Friday, January 9, 2009

புலிகள் அல்ல கிளிகள் ...











பச்சிளம் குழந்தைகளடா
புலிகளா இவர்கள்
கிளிகளடா கிளிகள்

அற்ப பதர்களே
கிளிநொச்சி பிடிக்க
இலை விடா துளிர்களை ...
வேறினை கிள்ளி எரிந்துவிட்டீர்களடா
குறுதிச்சகதியில்

பெண்களை பார்த்தால்
விரசம் தானாட
உங்கள் கண்களில்

கருவிகளால் துளைத்துவிட்டு
பிணங்களிடம் என்ன வேடிக்கை
பெண்களிடம் இதுதானே உங்கள் வாடிக்கை

அழுது அழுது கண்கள் சிவந்து
இரவுகள் பழுதானது தான் மிச்சம்

பிணம் தின்னும் பேய்களா
அல்லது நாய்களா
நரிகளா

நாய்களும் அல்ல
நரிகளும் அல்ல
நீங்கள் அவற்றின் எச்சம்

தமிழனின்
தமிழ் ஈழனின் உயிர்கள் உங்களுக்கு துச்சம்

தமிழன் என்று சொல்லிக்கொண்டு
எங்களை(க்) கொன்று

உங்கள் அரசியல் யாகங்களுக்கு
பலி ஆடுகள் நாங்கள்தானா


No comments: