Thursday, January 8, 2009

இடைத்தேர்தல் - கலைஞர் - கரகோஷம்

அடுத்த தலைப்பு வேறு கொடுத்திருந்தேன் போன பதிவில் அதை எழுதும் முன்னே மீண்டும் ஒரு நன்றி பகிர்தல். இடைத்தேர்தல் மாதிரி.

தன் படைப்புகளை அல்லது தனது விளையாட்டை அல்லது தனது பேச்சினை கேட்க வரும் கூட்டம் கண்டு ஒரு கலைஞன் மிகவும் சந்தோஷம் அடைவான்.

அதனைக்காட்டிலும் மிக உற்சாகம் கொள்வது வந்தவர்களின் கரகோஷம் அல்லது கைத்தட்டல் தான்.

அதைப்போல ...

நான் பொதுவாக, எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு உடன் பதில் பின்னூட்டம் இட்டு விடுவேன். இந்த முறை அதனை செய்யவில்லை. பெரிதாக காரணம் ஒன்றுமில்லை.

பாலகுமாரன் சொல்லுவது போல் என்னையே நான் சற்றே வெளியில் அல்லது விலகி நின்று கவணித்தேன். சந்தோஷமாய் உணர்ந்தேன்.

வலி உதர உலா வந்தேன் வலையில்

இன்று உதர முடியாமல் அல்லது அப்படி நினைக்காமல்

நன்கு சிக்குண்டேன் வலையில்.

பூ கொடுத்தார்கள் பலர்

நட்-பூ கொடுத்தார்கள் பலர்

வலைப்-பூ கொண்டு பூ கொடுத்தார்கள்

அனைத்து நட்-பூக்களும் நன்றி.


(தமிழ் மணத்தில் இந்த பூவின் வாசம் வீசவில்லை உதுவுங்களேன்)

அடுத்ததாக நான் இட்ட தலைப்பு அரசியல் அல்ல.

அது ஒரு அரசி இயல்.

சிறு கவிதை 1992 எழுதியது.

விரைவில் சந்திப்போம்

நட்புடன் ...



No comments: