“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!”
- கவிஞர் வாலி (நன்றி பிகேபி)
இதோ என்னை அதிகம் ஊக்குவிப்பவர்கள்
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | |||
![]() | ![]() | ![]() | ![]() | ||
![]() |
இன்னும் சிலர் இதில் வராமலும் எனக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள்
அனைவருக்கும் ’நன்றி’ என்ற ஒற்றை சொல்லை சொல்லி என் நன்றியினை தெரிவித்துவிட இயலாது.
தமிழ் கம்ப்யுட்டர் எனும் கணினி சார்ந்த தகவல் அடங்கிய இப்பத்திரிக்கையில் பிகேபி வழி பிளாக்ஸ்பாட் எனும் சொல்லையறிந்தேன். பிறகு நாமும் தொடங்களாமே என என் பெயரிலேயே பதிவு செய்து வைத்தேன்.
சிறுது சிறுதாக சில தகவல்களை பல வலைப்பக்கங்களிருந்து என் வலைப்பூவில் சுட்டியுடனும் நன்றியுடனும் இட்டேன்.
எனை அறிந்த எனது நலம் விரும்பி செல்லமாக என்னை கடிந்து கொண்டார், நீயே முயற்சி செய் என்றார்.
முயற்சிப்போம் என நானும் தொடங்கி இதோ உங்களில் பலரை அறிந்து பலரால் அறியப்பட்டு வருகிறேன்.
எனக்கு முதல் பின்னோட்டம் இட்ட அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்கும் என் நன்றி
திரைக்கு பின்னால் என்று பல இடங்களில் சொல்லுவர்.
பாறாங்கல்லுக்கு தெரியாது
நாம் சிற்பம் ஆவோம் என்று
சிற்பத்தை பார்ப்போருக்கு தெரியாது
இதை வடித்த சிற்பியை
அதைப்போல சும்மா கிடந்த இந்த பாறாங்கல்லையும் சிற்பமாக்கி பார்வைக்கு வைத்தவருக்கு எனக்கு கிடைத்த பாராட்டுகளையே தருகிறேன்.
என் பதிவுகளையும் படித்து மூன்று பேர் பட்டாம்பூச்சி விருது தந்து உள்ளனர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
இதோ நான் சிலருக்கு பகிர்கிறேன் என் வீட்டு தோட்டத்தில் பூக்களுக்குள் இருக்கும் இப்பட்டாம்பூச்சியை ...
டொன் லீ இவர் ஒரு சிறந்த வர்ணனையாளர். பதிவர்கள் சந்திப்புக்கு சென்றிருந்தோம். அங்கு நடந்த நிகழ்வுகளை அற்புதமாக தனது வார்த்தைகளில் பதிவேற்றியிருந்தார்.
தேவன்மயம் இவர் வைத்தியச்சேவை செய்பவர். அதிகம் தேசப்பற்று வாசம் வீசும் இவர் எழுத்துக்களில். கவிதைகளும் உண்டு.
அமித்து அம்மா இவருடைய எழுத்துக்கள் தவறாமல் படிப்பதுண்டு. 2002 இவர் எழுதிய கவிதைகள் அருமையானவை. குழந்தையபற்றியும் எழுதுவார்
அ.மு. செய்யது இவர் ஒரு புதுப்பதிவர். கவிதைகளும் இவருக்கு பழக்கமுண்டு மென்மேலும் எழுத வாழ்த்துகிறேன்.
அபுஅஃபஸர் இவர் மிக மிக புதுப்பதிவர். கவிதையும் எழுதியுள்ளார். பொருளாதாரத்தை பற்றி இப்போ எழுதியுள்ளார்.
வழக்கம் போல தான், இவர்கள் தங்கள் வலைப்பூவில் இப்பட்டாம்பூச்சியை இட்டு தாங்கள் அறிந்த சிலருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுகிறேன்.
நன்றியுடனும் நட்புடனும் ...
(அடுத்த பதிவு கருப்பு சூரியன் தமிழ் அரசி - இயல்)
No comments:
Post a Comment