Monday, November 17, 2008

நான் போட்ட பின்னோட்டம் ...

அபி அப்பா அவர்களே,

உங்கள் பதிவை படித்துகொண்டிருக்கும் போது மயிலாடுதுறை என்ற பெயர் பார்த்தவுடன் சுந்தரம் டாக்கீஸ் என்னா ஆட்ச்சின்னு கேட்க நினைத்தேன் அடுத்த சில வரிகளிலேயே அதை இடித்து விட்டார்கள் என்ற செய்தி ரொம்ப வருத்தத்தை கொடுத்தது.

Qyamat-se-Qyamat-tak 10 முறை அந்த தியேட்டரில் பார்த்தேன்.

முதன் முதல் கைராசிக்காரன் என்ற படம் தனியாக பஸ் ஏறி வந்து (திருட்டுதனமாய்) பார்த்தேன்.
நான் படித்த பள்ளி குரு ஞான சம்மன்தர், வசித்த ஊர் குத்தாலம்.

என் நண்பர் சுந்தரோடு “இனைந்த கைகள்” பார்த்தேன்.

மிக முக்கியமானது - நான் காதலித்த(ஒரு தலை காதல்) பெண்னோடு ( + அவங்க அம்மா & தம்பி) வருஷம் 16 படம் பார்த்தேன்.

இத்தனை சம்பவங்களும் நினைவில் மீண்டும் வருகின்றது.

இன்னும் பல உண்டு(ஒரு பதிவு போட்ர வேண்டியது தான்).


நன்றி - http://abiappa.blogspot.com/

No comments: