Monday, December 22, 2008

கெடுத்துவிட்டாயடா என்னை...!

டீ, காபி என்று குடித்து கொண்டிருந்த என்னை
இளநீரும்,பழச்சாறும் குடிக்க வைத்தாய்!

பெண்கள் பெண்கள் எனச்சுற்றும் என் கண்களுக்கு
இறை செய்த இயற்கைஅழகை
உணரச்செய்தாய்!

வேலை வேலை என்று பொழுதை போக்கும் என்னை
வேளா வேலைக்கு படைத்த இறைவனை தொழச்செய்தாய்!

கெடுத்து விட்டாயடா என்னை
உனை பிரிகிறேனே ...!

யார் சொல்லி தருவார் மீண்டும் இவற்றை!


(ஒரு நண்பனின் புலம்பல்)

No comments: